தென்காசி மாவட்டத்தில் உள்ள ஆழ்வார்குறிச்சியில் இருக்கும் ஒரு கட்டிடத்தின் பின்புறம் 12-ஆம் வகுப்பு படிக்கும் மாணவரும், 11- ஆம் வகுப்பு படிக்கும் மாணவியும் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக ஆழ்வார்குறிச்சி திருநீலகண்ட விநாயகர் கோவில் தெருவை சேர்ந்த சுடலைமுத்து என்பவரும், சிவசக்தி என்பவரும் நடந்து சென்றனர். அவர்கள் மாணவரும், மாணவியும் பேசிக்கொண்டிருந்ததை செல்போனில் படம் பிடித்து வைத்து இருவரையும் மிரட்டியுள்ளனர். இதனையடுத்து 2 பேரும் மாணவியிடம் திடீரென அத்துமீறி நடந்து கொண்டனர்.

இதனை பார்த்ததும் அதிர்ச்சியடைந்த மாணவர் ஆழ்வார்குறிச்சி காவல் நிலையத்திற்கு ஓடி சென்று நடந்து விவரத்தை கூறியுள்ளார். உடனடியாக போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மாணவியிடம் அத்துமீறி நடந்து கொண்ட சிவசக்தி, சுடலைமுத்து ஆகிய இருவரையும் மடக்கிப்பிடித்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் சுடலைமுத்துவையும், சிவசக்தியையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.