தென்காசி மாவட்டத்தில் உள்ள சங்கரன்கோவில் கக்கன் நகர் பகுதியில் மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் புதுமனை தெருவில் வசிக்கும் பாலு, சங்கர் ஆகியோர் மணிகண்டனின் வீட்டு வாசலில் பூ வைத்து விட்டு சென்றதாக தெரிகிறது. இதனை மணிகண்டன் தட்டி கேட்டபோது அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது.

அப்போது தகராறை தடுக்க வந்த சிவசக்தி என்பவர் காயமடைந்தார். இதுகுறித்து இரு தரப்பினரும் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் பாலு மற்றும் மணிகண்டன் ஆகிய இருவரையும் கைது செய்தனர். இந்த வழக்கில் தலைமறைவாக இருக்கும் 3 பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.