திருவாரூர் மாவட்டத்தில் உள்ள கஸ்தூர்பா காந்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 36 ஆவது ஆண்டு விளையாட்டு விழா நடைபெற்று உள்ளது. இந்த விழாவிற்கு கஸ்தூர்பா காந்தி கல்வி நிறுவனங்களின் தாளாளர் டாக்டர் சந்திரா முருகப்பன் தலைமை தாங்கி பேசியுள்ளார். மேலும் திருவாரூர் நகர்மன்ற உறுப்பினர் அன்பழகன், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் ஜெயச்சந்திரன் போன்றோர் முன்னிலை வகித்துள்ளனர். இந்நிலையில் திருவாரூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சிவராமன் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில்  வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கியுள்ளார்.

இதனையடுத்து பள்ளிக்கல்வித்துறை சார்பாக நடைபெற்ற சைக்கிள் போட்டியில் மாநில அளவில் மூன்றாவது இடம் பெற்ற மாணவர் எஸ்.ஜீவானந்தம் மகாராஷ்டிராவில் நடைபெற்ற கலை போட்டியில் வெள்ளிப் பதக்கம் பெற்ற கிஷோர் போன்றோருக்கு வாழ்த்துக்கள் கூறப்பட்டது. இந்த விழாவில் திருவாரூர் நகர்மன்ற உறுப்பினரும் திருவாரூர் நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை தலைவருமான கலியபெருமாள் திருவாரூர் மாவட்ட விளையாட்டு அலுவலர் ராஜா போன்றோர் கலந்து கொண்டனர்.