திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி ஒன்றியம் பெருந்தாரக்குடி பகுதியில் அமைந்துள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாவட்ட கலெக்டர் சாரு ஸ்ரீ திடீர் ஆய்வு செய்துள்ளார். அப்போது சுகாதார நிலையத்தில் உள்ள சீட்டு வழங்கும் இடம், மகப்பேறு பகுதி, ஆய்வகம், புற நோயாளிகள் பிரிவு, மருந்தகம் போன்றவற்றை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்துள்ளார்.

மேலும் பொதுமக்களிடம் மருத்துவமனையில் வழங்கப்படும் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தார். அதன் பின் மருத்துவர்கள் மற்றும் பணியாளர்களிடம் மருத்துவமனையை  தூய்மையாக வைத்துக் கொள்ளவும், பொது மக்களுக்கு விரைந்து சிகிச்சை அளித்திடவும் தேவையான மாத்திரை மற்றும் மருந்துகளை இருப்பு வைத்திருக்கும் மாறும் கலெக்டர் தெரிவித்துள்ளார்.