பள்ளியில் 3-ஆம் வகுப்பில் இருந்து தான் தேர்வு நடத்த வேண்டும். இரண்டாம் வகுப்பு வரை தேர்வு நடத்தக்கூடாது என தேசிய பாடத்திட்ட கட்டமைப்பு வரைவு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிக்கையில், குழந்தைகளின் கற்றல் திறமையை சோதிக்க பல வழிகள் இருக்கலாம். ஆனால் ஒரே கற்றல் முறையில் பலவித மதிப்பீட்டு முறையை வடிவமைக்கும் திறன் ஆசிரியர்களுக்கு இருக்க வேண்டும்.

அது குழந்தைகளுக்கு பாரமாக இருக்கக்கூடாது என தெரிவித்துள்ளது. இது தவிர்த்து 10, 12 ஆம் வகுப்புகளில் வழக்கமான பாடங்களுக்கு பதிலாக விருப்பத்தின் அடிப்படையில் மாணவர்கள் விரும்பிய பாடங்களை தேர்வு செய்து பயிலும் வாய்ப்பை வழங்கவும் பரிந்துரைக்கப்பட்டு இருக்கிறது. இதுகுறித்து பெற்றோர்கள், கல்வியாளர்கள் கருத்து தெரிவிக்கலாம் என்று ஒன்றிய கல்வி அமைச்சகம் அறிவித்து உள்ளது.