பிரதமர் மோடி குறித்து அவதூறாக பேசிய வழக்கில் ராகுல் காந்திக்கு எதிராக சூரத் நீதிமன்றம் 2 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. இதனால் மக்களவை செயலகமானது அவரது எம்பி பதவியை பறித்தது. இதையடுத்து ராகுல் அரசு பங்களாவை காலி செய்ய சொல்லி, நோட்டீசும் அனுப்பப்பட்டது. இருந்தாலும் கோர்ட்டின் இத்தீர்ப்புக்கு எதிராக மேல் முறையீடு செய்ய அனுமதி அளிக்கப்பட்டது. இதனிடையே அவருக்கு எதிராக அடுத்தடுத்து வழக்குகள் பதிவாகி வருகிறது.

இந்நிலையில் ராகுல் அலுவலகத்தின் பிஎஸ்என்எல் இணைப்புகள் துண்டிக்கப்பட்டது. அவதூறு வழக்கில் ராகுலுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதை அடுத்து, அவர் எம்பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இந்நிலையில் ராகுல் எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்ட கேரள மாநிலம் வயநாட்டில் உள்ள அவரது அலுவலகத்திற்கு வழங்கப்பட்ட டெலிபோன், இணையதள இணைப்புகளை பிஎஸ்என்எல் துண்டித்துள்ளது.