இந்திய ராணுவத்தின் சுகோய் 30 MKI விமானத்தில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு பயணம் மேற்கொண்டார். குடியரசு தலைவர் திரௌபதி முர்மு அசாமில் உள்ள தேஜ்பூர் விமானப்படை நிலையத்திலிருந்து சுகோய் 30 MKI என்ற போர் விமானத்தில் பறந்தார்.

அவர் விமானப்படை உடையில் கையசைத்தபடி மகிழ்ச்சியோடு பயணம் மேற்கொண்டு திரும்பினார். திரௌபதி முர்முவுக்கு முன் குடியரசு தலைவர் பிரதீபா பாட்டில் கடந்த 2009-ல் சுகோய் விமானத்தில் பறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.