பிரபல கோவில்களில் ஒன்றான திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு தினசரி லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்ய வருகின்றனர். இந்நிலையில் திருப்பதி கோவிலில் இலவச தரிசனப் பிரிவில் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. பக்தர்கள் சுமார் 50 மணி நேரத்திற்கு அதிகமாக காத்திருந்து ஏழுமலையானை தரிசனம் செய்து வருகின்றனர்.

தற்போது தொடர் விடுமுறை காரணமாக திருப்பதி கோவிலில் பெரும்பாலான பக்தர்கள் குவிந்த வண்ணம் இருக்கின்றனர். அந்த வகையில் வைகுண்டம் காத்திருப்பு மண்டபத்தில் இருக்கும் அனைத்து அறைகளிலும் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. அதே நேரம் ஏழுமலையானை தரிசிக்க பக்தர்கள் வரிசை 7 கிலோ மீட்டருக்கும் அதிகம் இருப்பதாக சொல்லப்படுகிறது.