உத்தரபிரதேசம் சம்பல் மாவட்டம் விர்க்வாரி கிராமத்தில் வசித்து வருபவர் சுனிதா (34). இவருக்கு திருமணம் முடிந்து 7 வயதில் மகள் இருக்கிறார். இதற்கிடையில் சுனிதாவின் கணவர் சென்ற 5 வருடங்களுக்கு முன் இறந்துவிட்டார். இதையடுத்து தன் குழந்தையுடன் தனியே வாழ்ந்து வந்த சுனிதாவுக்கு அதே கிராமத்தை சேர்ந்த நபருடன் பழக்கம் ஏற்பட்டு அது காதலாக மாறியுள்ளது.

கணவன் இறந்த நிலையில் சுனிதா தன் காதலனை 2-வது திருமணம் செய்ய நினைத்துள்ளார். அதற்கு சுனிதாவின் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். எனினும் குடும்பத்தினர் எதிர்ப்பையும் மீறி சுனிதா தன் காதலனுடன் வசித்து வந்தார். இந்த நிலையில் சென்ற புதன்கிழமை உறவினர்கள் சுனிதாவையும் அவரது காதலனையும் கடுமையாக தாக்கி உள்ளனர்.

மேலும் இருவரையும் வீட்டிற்கு வெளியில் இழுத்து வந்த குடும்பத்தினர் அங்குள்ள மரத்தில் கட்டிவைத்து கடுமையாக தாக்கினர். அதனை தொடர்ந்து கிராமத்தினர் தலையிட்டு சுனிதாவையும் அவரது காதலனையும் மீட்டனர். இது தொடர்பாக பாதிக்கப்பட்ட சுனிதா காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்படி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் 5 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.