கோவை அருகே இளம்பெண்ணை வீட்டில் அடைத்து வைத்து பல நபர்களுடன் உல்லாச அனுபவிக்க வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை சேர்ந்த 18 வயது பெண்ணுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்ற நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக இளம்பெண் தனது கணவரை பிரிந்து தனியே வசித்து வந்துள்ளார்.

இதனையடுத்து, அப்பெண்ணிற்கு சிவனேஷ் பாபு என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. சிவனேஷ் பாபு அடிக்கடி தனது நண்பர்களை அழைத்து வந்து கூட்டுப்பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.