ஏர் இந்தியா நிறுவனம் ஆரஞ்சு மற்றும் வெள்ளை நிறத்தை கொண்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த விமானம் ஏர் இந்தியாவின் சமீபத்திய குறைந்த கட்டண விமான சேவையின் ஒரு பகுதியாக செயல்பட உள்ளது. புதன்கிழமை மும்பையில் நடைபெற்ற அறிமுக நிகழ்வில் வெள்ளை, ஆரஞ்சு நிறங்களிளும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் முதல் முறையாகக் காட்சிப்படுத்தப்பட்டது.

விமான நிறுவனத்தின் இயக்குநர் அலோக் சிங், “சராசரியாக 2024ஆம் ஆண்டு இறுதிக்குள், ஏர் இந்தியா ஒவ்வொரு ஆறு நாட்களுக்கும் ஒரு புதிய விமானத்தை தனது சேவையில் இணைக்கும் என அவர் தெரிவித்தார்.