பீகார் மாநிலத்தில் உள்ள கோபால்கஞ்ச் மாவட்டத்தை சேர்ந்த விபின் குமார் எனும் இளைஞர் மொபைல் போன் பழுது பார்க்கும் கடை வைத்துள்ளார். இவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து மோமோஸ் சாப்பிடும் பந்தயத்தில் கலந்து கொண்டுள்ளார். 150 மோமோஸ் ஒரே நேரத்தில் சாப்பிட்டால் குறிப்பிட்ட அளவு பணம் கிடைக்கும் என்று அளவுக்கு அதிகமாக மோமோஸ் சாப்பிட்ட விபின் குமார் திடீரென மயங்கி விழுந்தார்.

அவரை மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்தும் பலன் இன்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் அவரது உடலை பிரேத பரிசோதனை முடித்து குடும்ப உறுப்பினர்களிடம் ஒப்படைத்துள்ளனர். இதனிடையே விபின் குமார் சாப்பிட்ட மோமோசில் அவரது நண்பர்கள் விஷம் கலந்து விட்டதாக குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.