SDPI மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய முன்னாள் தமிழக முதல்வரும், அதிமுகவின் பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி,  இது பிரம்மாண்டமான கூட்டம். இந்த கூட்டத்திற்கு கூட நீங்கள் பார்த்தீர்கள் என்றால்,  குடும்பம் குடும்பமாக நம் இஸ்லாமிய சகோதரிகள் வந்து அமர்ந்து இந்த கூட்டத்திலே இடம்பெற்று இருக்கிறார்கள் என்று சொன்னால்,  எந்த அளவிற்கு இந்த கூட்டம் சிறப்பாக அமர்ந்திருக்கிறது என்பதை நாம் எண்ணிப் பார்க்க வேண்டும்.

இந்த ஆண்டு ஒரு சிறப்பான ஆண்டாக அமையும். அதோடு மதுரை ஒரு ராசியான மண். மதுரை மண் ராசியான மண். இந்த ராசியான மண்ணில் தான் SDPI  கட்சி மாநாடு நடக்கிறது. மதுரையில் தொட்டது,  துலங்கும்.  இன்றைக்கு உங்களுக்கு வெற்றி கிட்டும். சந்தேகமே இல்லை… அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மாநாடும் அண்மையில் தான் நடைபெற்றது.

மிகச்சிறப்பாக…. எழுச்சியாக…… தமிழகம் மட்டுமல்ல,  இந்தியாவே வியக்கின்ற அளவிற்கு…..  சுமார் 15 லட்சம் பேரு அந்த மாநாட்டிலே கலந்து கொண்டு சிறப்பித்தார்கள். அதேபோல SDPI கட்சி எங்கே பார்த்தாலும் மனித தலைகளாக பார்க்கிறோம். சாலை இரு புறங்களிலும் மக்கள் நடமாட்டம். நான் வருகிற பொழுது….  மூன்று கிலோமீட்டர் சாலையிலே வாகனம் அணிவகுத்து  நின்றது. அதனால் தான் நம்முடைய மாநில தலைவரிடம் சொன்னேன். எனக்கு பின்னால  நீங்கள் பேசுங்கள்….  ஏன்னா இன்னும் நிறைய பேர் வந்து கொண்டிருக்கிறார்கள்.

இந்த மாநாட்டில் கலந்து கொண்டு….   இந்த மாநாட்டில் என்ன பேசுவார்கள்  என்று கேட்பதற்காக ? பல மையில் தூரத்தில் இருந்து எஸ்டிபிஐ தொடர்கள் அணி அணியாக வந்து கொண்டிருக்கிறார்கள். பொறுமையாக நீங்கள் பேச வேண்டும் என்று கேட்டுக் கொண்டதற்கு இணங்க எனக்கு முன்பு பேசுவதற்கு வாய்ப்பு கொடுத்தார்கள். எதற்காக சொல்கிறேன் என்றால்,  அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை பொருத்தவரைக்கும் சிறுபான்மை மக்களை அரண் போல் காக்கின்ற  கட்சி அண்ணா திமுக கட்சி என தெரிவித்தார்.