நாட்டில் சமீப காலமாகவே பாலியல் பலாத்கார சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. இது தொடர்பாக அரசு பலவிதமான சட்டங்களை இயற்றினாலும் சில காமக் கொடூரர்கள் இது போன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள். தற்போது தெலுங்கானா மாநிலத்தில் 15 வயது ஆதரவற்ற சிறுமி கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெற்றோரை இழந்த சிறுமி தன்னுடைய சகோதரனுடன் உறவினர் வீட்டில் வசித்து வந்துள்ளார். அப்போது வீட்டில் ஆள் இல்லாத நேரம் பார்த்து கீழ் வீட்டில் இருந்த நபர் தன்னுடைய நண்பர்கள் ஏழு பேருடன் சேர்ந்து அந்த சிறுமியை பலாத்காரம் செய்துள்ளார். இது தொடர்பான சிசிடிவி வீடியோ அடிப்படையில் நான்கு பேரை கைது செய்த காவலர்கள் மீதமுள்ள நான்கு பேரை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.