12 ஆம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படித்த மாணவர்கள் உயர்கல்வி படிக்க ஏதுவாக தமிழ் புதல்வன் திட்டத்தின் கீழ் தமிழக அரசு மாதம் தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கி வருகிறது. இந்த நிலையில் பிளஸ் டூ தேர்வில் தேர்ச்சி பெற்ற உயர் கல்வி சேர விரும்பும் மாணவர்கள் இந்த திட்டத்தில் விண்ணப்பித்து பயன்பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. கல்லூரிகளில் சேர்ந்த பிறகு மாணவர்கள் அதற்கான ஆவணங்களை சமர்ப்பித்து மாதம் ஆயிரம் ரூபாய் உதவி தொகை பெறலாம்.