ஜார்க்கண்ட் போகராவ் நகரத்தை சேர்ந்த ராம் சந்திரதுரி என்பவர் தன்னை குடிக்கவேண்டாம் என அறிவுரை சொல்லிய சாவித்திரி தேவியை கோபத்தில் அடித்து கொன்றுள்ளார். சாவித்ரி தேவி, ராம் சந்திரதுரியின் 12வது மனைவி என்பது குறிப்பிடத்தக்கது. சம்பவத்தன்று ராம் சந்திரதுரி குடித்துவிட்டு வீடு திரும்பி உள்ளார். இதையடுத்து அவர் மீண்டும் மது அருந்த ஆரம்பித்து உள்ளார்.

இதை அவரது மனைவி சாவித்திரி தேவி தடுத்து இருக்கிறார். இதனால் போதை தலைக்கேறிய ராம் சந்திர துரி கோபத்தில் மனைவியை அங்கிருந்த கட்டையால் தலையில் பலமாக அடித்து உள்ளார். இதன் காரணமாக சாவித்ரி தேவி தரையில் நிலைகுலைந்து தரையில் விழுந்து உள்ளார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று ராம் சந்திர துரியை கைது செய்தனர்.