கேரளா ஆலப்புழா-கண்ணூர் செல்லும் எக்ஸ்கியூட்டிவ் ரயிலில் டி1 பெட்டியில் இருந்த மர்ம நபர் அப்பெட்டியில் பயணம் மேற்கொண்ட பயணிகள் மீது திடீரென்று பெட்ரோல் ஊற்றி நெருப்பு வைத்தார். இச்சம்பவத்தில்3 பேர் பலியானார்கள். இது தொடர்பாக என்.ஐ.ஏ விசாரணை மேற்கொண்டு வருகிறது. இவ்வழக்கு குறித்து மராட்டிய ரத்னகிரியில் ஷாருக் சைபி என்பவரை உளவுப்பிரிவு பயங்கரவாத தடுப்புப்படை பிரிவினர் கைது செய்தனர்.

இந்நிலையில் ரயிலில் தீவைத்தது பற்றி கைதான ஷாருக் சைபி அதிர்ச்சியான வாக்குமூலம் அளித்து உள்ளார். அதாவது “ரயிலில் தாக்குதல் நடத்தினால் நல்ல காலம் பிறக்கும் என ஒருவர் அறிவுரை வழங்கினார். அதன்படி ரயிலில் பயணிகள் மீது தீ வைத்தேன் ஷாருக் சைபி பாப்பரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். தற்போது ஷாருக் சைபிக்கிடம் காவல்துறையினர் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.