மராட்டியம் கண்டிவலி மேற்கிலுள்ள மழலையர் பள்ளி ஒன்றில் பயிலும் சிறுவனின் நடவடிக்கையில் மாற்றங்கள் தெரிந்ததால் பெற்றோர் அதுகுறித்து விசாரித்தனர். இந்நிலையில் அக்குழந்தைகளை ஆசிரியர்கள் துன்புறுத்துவது தெரியவந்தது.

இதுபற்றி கேள்வி எழுப்பிய பெற்றோர் பள்ளியில் இருந்த சிசிடிவி கேமராவை சோதனை மேற்கொண்டனர். அந்த சோதனையில் ஆசிரியர்கள் மாணவர்களை தாக்குவது பதிவாகியிருந்தது. இதனை ஆதாரமாக வைத்து பெற்றோர் அளித்த புகாரின் படி காவல்துறையினர் ஆசிரியர்கள் 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.