நாடு முழுவதும் கொரோனா அதிகரித்து வருவதால் மாநில மருத்துவ அமைச்சர்களுடன் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் நாளை அவசர ஆலோசனையில் ஈடுபடுகிறார். இந்த ஆலோசனையில் அனைத்து மாநில சுகாதார செயலாளர்களும் பங்கேற்க இருக்கின்றனர். ஆலோசனையின் முடிவில் நாடு முழுவதும் கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்த முக்கிய அறிவிப்புகள் வெளியாகலாம் என்று கூறப்படுகிறது.