விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளியில் 17 வயது சிறுமி 12-ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்த மாணவி தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மாணவியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தினர்.

அந்த விசாரணையில் அரையாண்டு தேர்வில் காப்பி அடித்ததாக மாணவியின் பெற்றோருக்கு ஆசிரியர்கள் தகவல் தெரிவித்தனர். மேலும் டிசியை பெற்றுக் கொள்ளுமாறு வற்புறுத்தியதாக தெரிகிறது. இதனால் மன உளைச்சலில் மாணவி தற்கொலை செய்ததாக போலீசார் கூறுகின்றனர். மேலும் மாணவியை தற்கொலைக்கு தூண்டியதாக விழுப்புரம் தனியார் பள்ளி ஆசிரியர்கள் ஐந்து பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.