குதிரைப் பாலுக்கு திருச்சி மாவட்டம் மணப்பாறையில் மவுசு அதிகரித்துள்ளது. ஒரு லிட்டர் பால் 2,500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அப்பகுதி மக்கள் முன்பதிவு செய்து குதிரைப் பாலை வாங்கி செல்கின்றனர். வாடிப்பட்டியைச் சேர்ந்த பாலசுப்ரமணியன் என்பவர் குதிரை பால் விற்பனையை அண்மையில் தொடங்கினார். மக்களிடம் இதற்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. குதிரை பாலில் பல மருத்துவ குணங்கள் இருப்பதாக கூறப்படுவதால், மக்கள் காத்திருந்து அதனை வாங்கி செல்கின்றனர்.