பணத்தட்டுப்பாட்டால் தவிக்கும் பாகிஸ்தானின் தேசியச் சட்டமன்றத்தில் (Pakistan National Assembly) நடந்த நகைச்சுவையான சம்பவம் ஒன்றுச் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
திங்கட்கிழமை நடந்தச் சாதாரண அமர்வின்போது, சபாநாயகர் அயாஸ் சாதிக் (Ayaz Sadiq) சபையின் தரையில் கிடந்த 5,000 பாகிஸ்தான் ரூபாய் (PKR 5,000) நோட்டுகள் 10 அடங்கியக் கட்டைக் கண்டுபிடித்துள்ளார்.
அந்தப் பணத்தை எடுத்துக் கையில் காட்டிய சபாநாயகர், “இது யாருடைய பணம்? யாருக்குச் சொந்தமோ, கையை உயர்த்துங்கள்” என்று கேட்டார். அதைக் கேட்டு அதிர்ச்சி அளிக்கும் விதமாக, 12 முதல் 13 நாடாளுமன்ற உறுப்பினர்கள் (MP) ஒரே நேரத்தில் பணத்துக்கு உரிமை கோரிக் கையை உயர்த்தினர்.
🇵🇰 पाकिस्तान के Assembly में अध्यक्ष ने कुछ पैसा दिखाकर कहा कि “ये किसी के पैसे गिर गए है, जिनका है हाथ खड़ा करे”।
अब जितने पैसे नहीं थे उतने से अधिक सांसदों ने पैसे लेने के लिए अपना हाथ खड़ा कर दिया।😂🤣🤣 pic.twitter.com/fDeJ2xm4Qa
— Einstein Yadav (@GYdv28) December 9, 2025
இதைக் கண்ட சபாநாயகர், “10 நோட்டுகளுக்கு 12 உரிமையாளர்கள் இருக்கிறார்கள்!” என்று நகைச்சுவையாகக் கூறிச் சிறிது நேரம் அமர்வை நிறுத்தி வைத்தார்.
பின்னர், அந்தப் பணம் இம்ரான் கானின் பி.டி.ஐ. (PTI) கட்சியைச் சேர்ந்த முகமது இக்பால் அப்ரிதி (Muhammad Iqbal Afridi) என்ற எம்.பி-க்குச் சொந்தமானது என்று தெரிய வந்து, அவரிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவிய நிலையில், பாகிஸ்தானியர்கள் தங்கள் அரசியல்வாதிகளைக் கேலி செய்து வருகின்றனர்.
