கர்நாடகாவில் 3வது மனைவியை கணவர் ஒருவர் 12 ஆண்டுகளாக வீட்டு சிறையில் அடைத்து வைத்து இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கெனவே, 2 மனைவிகள் விவாகரத்து வாங்கியதால், இவரும் விவாகரத்து கேட்டுவிடுவாரோ என்ற பயத்தில் வீட்டிற்கு 3 பூட்டுகள் போட்டு சிறை வைத்துள்ளார்.

கழிவறை கூட இல்லாமல் அந்த பெண், வாளியிலேயே இயற்கை உபாதைகளை கழித்து வந்துள்ளார். இந்த கொடுமைகளை தாங்காமல் முதல் 2 மனைவிகள் கொடுத்த புகாரின் பேரில் கணவரை போலீசார் கைது செய்தனர்.