ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவச அரிசி, மலிவு விலையில் மளிகை பொருட்களும் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ரேஷன் அட்டை பயனர்களுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பு ஒன்றை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அந்த்யோதயா யோஜனா திட்டத்தின் கீழ் ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்படும் மானியத் திட்டத்தை மேலும் 2 ஆண்டுகளுக்கு நீட்டிக்க மத்திய அரசு முக்கிய முடிவு எடுத்துள்ளது.

இத்திட்டம் 2026 மார்ச் 31ம் தேதி வரை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் படி, அந்த்யோதயா அன்ன யோஜனா திட்ட பயனாளிகளுக்கு மட்டும் ஒரு கிலோ சர்க்கரை இலவசமாக வழங்கப்படும்.