பந்திப்பூர் – வயநாடு தேசிய நெடுஞ்சாலையில் ஆக்ரோஷமாக துரத்திய யானையிடமிருந்து நூலிழையில் ஒருவர் உயிர் தப்பியுள்ளார். இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. வனப்பகுதியை ஒட்டியுள்ள சாலையை வாகன ஓட்டிகள் கடக்கும்போது திடீரென அவ்வழியாக காட்டு யானை ஒன்று வந்துள்ளது.

யானை வருவதை பார்த்த இரண்டு பேர் அலறி அடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர். யானை அவர்களை விடாமல் துரத்தி வந்தது. ஒருவர் தடுமாறி விழுந்த நிலையில், நூலிழையில் யானையிடம் இருந்து உயிர் தப்பினார்.