இடைக்கால பட்ஜெட் குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், ஒரு வெற்று அறிக்கை இந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. அனைவரையும் ஏமாற்றக்கூடிய வகையில் இது இருந்தது. பாஜகவினரையே அதிர்ச்சி அடையக்கூடிய வகையில் ஒன்றுமில்லாத பட்ஜெட்டாக இது அமைந்துள்ளது.

இதற்குப் பிறகு நேரடியாக தேர்தலை சந்திக்க இருக்கும் நிலையில் பாஜக தடுமாறி போய் உள்ளது. தேர்தலை சந்திப்பதில் அவர்களுக்கு மிகப்பெரிய நெருக்கடி உருவாகி இருப்பதை இந்த பட்ஜெட் உணர்த்துகிறது என திருமாவளவன் விமர்சித்துள்ளார்.