அயோத்தி ராமர் கோவிலில் பக்தர்கள் நாள்தோறும் குவிந்த வண்ணம் உள்ளனர். 25 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் இதுவரை ராமர் கோவிலுக்கு வந்து சென்றுள்ள நிலையில் 11 கோடிக்கும் அதிகமான நன்கொடை பெறப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பேசிய கோவில் அறக்கட்டளையின் அலுவலக பொறுப்பாளர், கடந்த 11 நாட்களில் மட்டும் கோவில் உண்டியல்களில் 8 கோடி ரூபாய் பெறப்பட்டுள்ளதாகவும் காசோலைகள் மற்றும் இணைய வழி மூலமாக 3.50 கோடி ரூபாய் நன்கொடையாக பெறப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.