இந்தியாவில் திறனுள்ள இளைஞர்கள் சுயதொழில் செய்வதை ஊக்குவிக்கும் விதமாக புதுமையான தொழில்நுட்ப முயற்சிகளுடன் தொடங்கப்படும் நிறுவனங்கள் ஸ்டார்ட் அப் என்று அழைக்கப்படுகிறது. தற்போது 1.17 லட்சம் அங்கீகரிக்கப்பட்ட ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் இந்தியாவில் உள்ள நிலையில் இந்த நிறுவனங்களுக்கு வரி சலுகை உட்பட பல சலுகைகள் வழங்கப்படுகிறது.

இந்தத் துறையினரை ஊக்குவிக்கும் விதமாக வரி சலுகைகளை 2025 ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் தேதி வரை நீட்டிப்பதாக பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகி உள்ளது. மிகவும் அரசின் முதலீட்டை நிதி மற்றும் பென்ஷன் திட்டங்கள் மற்றும் ஐஎஃப்எஸ்சி என்று அழைக்கப்படும் சர்வதேச நிதி சேவை மையங்களுக்கான வரி சலுகைகளும் அடுத்த ஆண்டு மார்ச் 31ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.