2023 – 24 ஆம் கல்வியாண்டுக்கான பொதுத்தேர்வு மாணவர்களுக்கான செய்முறை தேர்வுகள் கடந்த மாதம் முடிவடைந்த நிலையில் தற்போது பொதுத்தேர்வுகள் தொடங்கியுள்ளது. அதன்படி மார்ச் 1ஆம் தேதி 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு தொடங்கிய நிலையில் மார்ச் 4ஆம் தேதி நேற்று 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வுகள் தொடங்கின.

முதல் நாளான நேற்று தமிழ் தேர்வு நடந்த நிலையில் 11-ம் வகுப்பு பொதுத் தேர்வில் 9,844 மாணவர்கள் கலந்து கொள்ளவில்லை என்ற தகவலை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. இந்த தேர்வில் கலந்து கொள்ளாத மாணவர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு விசாரணை நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.