நீலகிரி மாவட்டம் முன்னாள் ஆட்சியரும் அமமுக அருந்ததியர் பேரவையின் மாநிலச் செயலாளருமான ராமசுவாமி ஐஏஎஸ் நேற்று இரவு இபிஎஸ் முன்னிலையில் அதிமுகவில் இணைந்துள்ளார். கொங்கு மண்டலத்தில் அருந்ததியர் சமூகத்தின் வாக்கு அதிக அளவில் உள்ளது. கடந்த சில தேர்தல்களில் திமுகவிற்கே அவர்களின் வாக்குகள் செல்கின்றன. இதை உணர்ந்த இபிஎஸ், அந்த சமூகத்தின் முக்கிய தலைவர்களை அதிமுகவில் இணைக்க பல நடவடிக்கைகளை எடுக்கிறார்.