கலைஞர் உலக அருங்காட்சியகத்தை மார்ச் ஆறாம் தேதி நாளை முதல் ஒவ்வொரு நாளும் காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை பொதுமக்கள் பார்வையிடலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. www. kalaignarulagam.org என்ற இணையதளத்தில் பொதுமக்கள் பதிவு செய்து அனுமதி சீட்டை பதிவிறக்கம் செய்யலாம். ஒருவர் ஒரு அலைபேசி எண் மூலம் ஐந்து அனுமதி சீட்டுகள் வரை பெறலாம். ஆனால் கருணாநிதியை நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துவதற்கு அனுமதி சீட்டு தேவை இல்லை.