தமிழகத்தில் வேலையில்லாத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கும் விதமாக மாவட்ட வாரியாக வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஜனவரி 23ஆம் தேதி காஞ்சிபுரத்தில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பாக மாவட்ட நிர்வாகம் இணைந்து இலவச வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட உள்ளது. இந்த முகாமில் 18 வயது முதல் 35 வயதுக்குட்பட்ட அனைவரும் பங்கேற்கலாம்.

பட்டதாரிகள், பட்டப்படிப்பு, ஐடிஐ, 10, 12 ஆம் வகுப்பு கல்வி தகுதி உடையவர்கள் பங்கேற்கலாம். முகாமிற்கு வர இருப்பவர்கள் சுயவிவர குறிப்போடு புகைப்படத்தையும் எடுத்துக்கொண்டு வரவேண்டும். இது குறித்து கூடுதல் விவரங்களுக்கு 044 – 27237124 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.