சிவில் நீதிபதி பதவிக்கு வருகின்ற ஜனவரி 29ஆம் தேதி முதல் நேர்முகத் தேர்வு நடைபெறும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. உரிமையியல் நீதிபதி பதவிக்கான நேர்முகத் தேர்வு வருகின்ற 29ஆம் தேதி முதல் பிப்ரவரி 10ஆம் தேதி வரை (பிப்ரவரி 3, 4, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை நீங்கலாக) சென்னையில் உள்ள தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய அலுவலகத்தில் நடைபெறும். நேர்முக தேர்வுக்கான தேதி, நேரம் மற்றும் விவரங்கள் அடங்கிய அழைப்பு குறிப்பாணையினை விண்ணப்பதாரர்கள் தேர்வாணைய இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.