சென்னையில் இஎம்ஆர் ஐ கிரீன் ஹெல்த் சர்வீஸ் நிறுவனம் மூலமாக 108 ஆம்புலன்ஸ் சேவை செயல்படுத்தப்பட்டு வருகின்றது. இதில் மொத்த 1200க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள் ஏங்கி வரும் நிலையில் அதில் 5000க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் ஆம்புலன்ஸ் சேவையில் காலியாக உள்ள 100 அவசர கால மருத்துவ உதவியாளர்கள் பணியிடங்களுக்கான நேர்முகத் தேர்வு நடைபெற உள்ளது.

இந்த பணியில் சேர பி எஸ் சி நர்சிங், பிஎஸ்சி விலங்கியல், தாவரவியல், நுண் உயிரியல் மற்றும் உயிரி வேதியல் படிப்பில் ஏதேனும் ஒன்றை நிறைவு செய்திருக்க வேண்டும். 19 முதல் 30 வயதிற்கு உட்பட்டவர்கள் இந்த பணியில் சேரலாம். தேனாம்பேட்டை டி எம் எஸ் வளாகத்தில் எழுத்து தேர்வு, மருத்துவ தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வுகள் நடைபெறுகின்றன. அசல் சான்றிதழ்களுடன் நேரில் சென்று அதில் கலந்து கொள்ளலாம் எனவும் கூடுதல் விவரங்களுக்கு 9150084170 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.