மத்திய அரசு நாட்டு மக்களுடைய நலனுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டங்களின் மூலம் மக்களுக்கு பண உதவி போன்ற பல்வேறு வகையான சலுகைகள் கிடைத்து வருகிறது. அதோடு மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதற்கும் பல வகையான திட்டங்கள் செயல்பாட்டில் உள்ளன. அதில் ஒன்றுதான் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டம். இது 100 நாள் வேலை திட்டம் எனவும் அழைக்கப்படுகிறது.

இந்த வருடம் ஜனவரி மாதத்தில் 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் பதிவு செய்தவர்களுக்கு ஊதியம் வழங்க ஆதார் அடிப்படையில் கட்டண முறை பயன்படுத்துவதை மத்திய அரசு கட்டாயப்படுத்தியது. இந்த AEPS முறையை கட்டாயமாக ஏற்றுக் கொள்வதற்கான காலக்கடுவானது முதலில் பிப்ரவரி-1 ஆக இருந்தது. அதன் பிறகு மார்ச் 31 எனவும் அதன் பின்னர் ஜூன் 30, கடைசியாக ஆகஸ்ட் 31 வரை நீட்டிக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது ஆகஸ்ட் 31க்கு மேல் இந்த காலக்கெடு நீட்டிக்கப்படாது என்று தெரியவந்துள்ளது.