இந்தியா முதல் முறையாக ஜி-20 நாடுகளின் பட்டியலில் தலைவர் பதவி நடப்பு 2023 ஆம் வருடத்திற்கு ஏற்றுள்ளது. இதனால் பொருளாதார சட்டங்களை எட்டாம் தேதி முதல் 10ம் தேதி வரை டெல்லியில் உள்ள பிரகதி மைதானத்தில் நடத்தப்பட இருக்கிறது. இதில் பல முக்கிய தலைவர்களும் கலந்து கொள்ள இருக்கிறார்கள். இதனால் மாநாட்டிற்கான பணிகள் அனைத்தும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இதனை அடுத்து டெல்லி அரசு செப்டம்பர் 8 முதல் 10ஆம் தேதி வரை மூன்று நாட்களுக்கு பொது விடுமுறை அறிவிப்பு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த நிலையில் புதுடெல்லியில் உள்ள அனைத்து கடைகள் வணிக நிறுவனங்கள் அனைத்திலும் பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு ஊதியத்தோடு கூடிய விடுமுறை அளிக்குமாறு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.