திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஏரியோடு நால்ரோடு பகுதியில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகப்படும்படியாக சுற்றி திரிந்த 10 பேரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர்கள் வடமதுரை சேர்ந்த சபரி, மாரி, சிவா, பிரவீன், கிருஷ்ணகுமார், பாலா, ராபர்ட், ஜெயசூர்யா, ரஞ்சித், விக்கி என்பது தெரியவந்தது.

இவர்கள் வட மாநில தொழிலாளர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களை குறி வைத்து கஞ்சா விற்பனை செய்துள்ளனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் 10 பேரையும் கைது செய்து அவர்களிடம் இருந்த 2 கிலோ கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர்.