திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பேருந்து நிலையத்திற்கு தினமும் ஏராளமான பயணிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் பயணிகள் நடந்து செல்ல முடியாத அளவுக்கு கடைகளின் முன்பு ஆக்கிரமிப்புகள் இருக்கிறது. அதனை அகற்ற வேண்டும் என அனைத்து தரப்பினரும் கோரிக்கை விடுத்தனர்.

இந்நிலையில் மாநகராட்சி ஆணையர் சிவசுப்பிரமணியனின் உத்தரவின்படி நகரமைப்பு அலுவலர் சேதுராமன் தலைமையிலான அதிகாரிகள் போலீஸ் பாதுகாப்புடன் சென்று ஆக்கிரமிப்புகளை பொக்லைன் எந்திரம் மூலம் இடித்து அகற்றினர்.