திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் வனக்கோட்டம் பாம்பார் வனப்பகுதி தனியார் தோட்ட பகுதிகளில் நேற்று முன்தினம் மாலை நேரத்தில் இருந்து காட்டுத்தீ பற்றி எரிகிறது. மேலும் காற்றின் வேகம் காரணமாக தீ வேகமாக பரவி அரியவகை மரங்கள், மூலிகை செடிகள் எரிந்து நாசமானது.

இதுகுறித்து அறிந்த 20-க்கும் மேற்பட்ட வனத்துறை ஊழியர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையே வில்பட்டி செல்லும் மலை பாதையில் நேற்று தீ பற்றி எரிந்தது. இதுகுறித்து அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று 1 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயை அணைத்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது