தர்மபுரி மாவட்டத்தில் உள்ள காரிமங்கலம் அருகே இருக்கும் கிராமத்தில் 14 வயது சிறுமி வசித்து வருகிறார். இவர் அரசு பள்ளியில் 9- ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் உறவினர் வீட்டிற்கு செல்வதாக கூறி வீட்டில் இருந்து புறப்பட்ட சிறுமி திரும்பி வரவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் சிறுமியை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். இதற்கிடையே வீட்டிற்கு வந்து சிறுமியிடம் பெற்றோர் விசாரித்தனர்.

அப்போது அஸ்வின் என்பவர் தன்னை கடத்தி சென்றதாக சிறுமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் காரியமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்த போலீசார் அஸ்வினை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.