கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள எஸ்.திம்மசந்திரன் கிராமத்தில் ராமச்சந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கமலா(26) என்ற மகள் இருந்துள்ளார். கடந்த 2016-ஆம் ஆண்டு கமலாவுக்கு கணேசன் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதியினருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் இருக்கின்றனர். நேற்று முன்தினம் ராமச்சந்திரன் தனது மனைவியுடன் சென்று மகளையும்,பேரக்குழந்தைகளையும்  பார்த்து வந்துள்ளனர்.

இதனையடுத்து வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் கமலா தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கமலாவின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்நிலையில் தனது மகளின் சாவில் சந்தேகம் இருப்பதாக ராமச்சந்திரன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.