தர்மபுரி மாவட்டத்திலுள்ள சரவணம்பட்டியில் வியாபாரியான கனகராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் களிமண்ணால் ஆன பொருட்களை தயாரித்து விற்பனை செய்து வந்துள்ளார். இந்நிலையில் பெங்களூருவை சேர்ந்த ஒருவரிடம் தனது கடையை விரிவுபடுத்துவதற்காக கனகராஜ் 1 கோடி ரூபாய் கடன் கேட்டதாக தெரிகிறது. அவர் தர்மபுரியில் வசிக்கும் தனது நண்பர் ஒருவரை செல்போன் மூலம் அறிமுகம் செய்து வைத்துள்ளார்.

இந்நிலையில் கடன் பெற தேவையான ஆவணங்கள் மற்றும் 4 லட்சம் ரூபாய் பணம் ஆகியவற்றை தர்மராஜ் அந்த நபரிடம் கொடுத்துள்ளார். அதன் பிறகும் அவர்கள் கடன் வாங்கி கொடுக்கவில்லை. கொடுத்த பணத்தையும் திருப்பி தரவில்லை. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த கனகராஜ் அதியமான்கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.