தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பாப்பிரெட்டிப்பட்டி பேருந்து நிலையத்தில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒரு பெண்ணை போலீசார் பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர் அதே பகுதியில் வசிக்கும் மஞ்சுளா(55) என்பது தெரியவந்தது.

மேலும் மஞ்சுளா பகுதியில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து வந்துள்ளார். இதனால் மஞ்சுளாவை போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் அவரிடம் இருந்த லாட்டரி சீட்டுகள் மற்றும் 5 ஆயிரத்து 720 ரூபாய் பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.