கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பெல்லட்டி பகுதியில் கணேசா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சம்பங்கியம்மா(22) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு குழந்தை இல்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த சம்பங்கியம்மா தனது வீட்டில் விஷம் குடித்து மயங்கி விழுந்தார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சம்பங்கியம்மா பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.