திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தேவர்குளத்தில் இருந்து அரசு டவுன் பேருந்து நெல்லை நோக்கி வந்து கொண்டிருந்தது. அந்த பேருந்தில் 15-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். இந்நிலையில் ராமையன்பட்டியில் இருக்கும் காவலர் குடியிருப்பு அருகே சென்றபோது பேருந்தின் பின்பக்க சக்கரம் எதிர்பாராதவிதமாக கழன்று சாலையில் ஓடியது.

உடனடியாக சுதாரித்துக் கொண்டு டிரைவர் பேருந்தை சாலையோரம் நிறுத்தியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இந்த விபத்தில் பேருந்தில் இருந்த பயணிகள் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பினர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.