தென்காசி மாவட்டத்தில் உள்ள திப்பனம்பட்டி பகுதியில் துரைப்பாண்டி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சீனியம்மாள்(52) என்ற மனைவி இருந்துள்ளார். கடந்த மாதம் 27-ஆம் தேதி சீனியம்மாள் நெல்லை- சங்கரன்கோவில் மெயின் ரோட்டில் கானார்பட்டி விலக்கு அருகே நடந்து சென்றுள்ளார். அப்போது சக்திவேல் என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் சீனியம்மாள் மீது மோதியது.

இந்த விபத்தில் படுகாயமடைந்த சீனியம்மாளை அக்கம் பக்கத்தினர் மீட்டு பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.