சேலம் மாவட்டத்தில் உள்ள புங்கவாடி காட்டுகொட்டகை பகுதியில் விவசாயிகளான அழகேசன்(41), கிருஷ்ணசாமி(71) ஆகியோர் வசித்து வருகின்றனர். இருவருக்கும் இடையே பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக தகராறு ஏற்பட்டது. கடந்த 2017-ஆம் ஆண்டு கிருஷ்ணசாமி அழகேசனை தகாத வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

இதுகுறித்து அழகேசன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் கிருஷ்ணசாமியை கைது செய்தனர். இந்த வழக்கினை விசாரித்த ஆத்தூர் சார்பு நீதிமன்றம் கிருஷ்ணசாமிக்கு 2 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும் 5 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டது.