சேலம் மாவட்டத்தில் உள்ள உலிபுரம் நரிக்கரடு பகுதியில் அறிவழகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அமுதா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் அறிவழகன் வேலைக்கு சென்ற நேரத்தில் அவரது தந்தை பழனி வீட்டிற்குள் நுழைந்து மருமகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார்.

இதற்கு அமுதா கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் கடந்த 2020-ஆம் ஆண்டு பழனி தனது மருமகளை கோடாரியால் வெட்டி கொலை செய்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் பழனியை கைது செய்தனர். இந்த வழக்கினை விசாரித்து சேலம் 2-வது கூடுதல் அமர்வு நீதிமன்றம் பழனிக்கு ஆயுள் தண்டனையும், 2000 ரூபாய் அபராதம் விதித்து உத்தரவு பிறப்பித்தது.