சேலம் மாவட்டத்தில் உள்ள கந்துகாரன் வளவு பகுதியில் வசிக்கும் மாரியப்பன், சாந்தி ஆகியோர் செம்மறி ஆடுகளை வளர்த்து வந்தனர். நேற்று முன்தினம் ஆடுகளை பட்டியில் அடைத்து விட்டு வீட்டிற்கு சென்றனர். இந்நிலையில் மறுநாள் காலை சென்று பார்த்த போது மர்ம விலங்கு கடித்து 12 செம்மறி ஆடுகள் இறந்து கிடப்பதை கண்டு மாரியப்பனும், சாந்தியும் அதிர்ச்சியடைந்தனர்.

இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறையினர் மர்ம விலங்கின் கால் தடயத்தை ஆய்வு செய்தனர். இதனையடுத்து மர்ம விலங்கின் நடமாட்டத்தை கண்டறிந்து அதனை வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.