திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அம்பை அருகே இருக்கும் பிரம்மதேசத்தில் சங்கரலிங்கம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கண்ணன் என்ற மகன் உள்ளார். இவர் கொத்தனார் கான்ட்ராக்ட் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் மர்ம நபர்கள் நேற்று முன்தினம் இரவு நேரத்தில் கண்ணனுக்கு சொந்தமான சரக்கு ஆட்டோவை தீ வைத்து எரித்தனர்.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் சரக்கு ஆட்டோவில் பற்றி எரிந்த தீயை தண்ணீர் ஊற்றி அணைத்தனர். ஆனால் இந்த தீபத்தில் சரக்கு ஆட்டோ முழுவதுமாக எரிந்தது. இதுகுறித்து கண்ணன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.